ரமணகிரி சுவாமிகள் - மறைக்கப்பட்ட வரலாறு








திருவண்ணாமலை நமக்கு பல மகான்களை தந்திருந்தாலும் அதில் முதன்மையானவர் என்று ரமண மகரிஷியை சொல்லலாம்ரமணரை தமிழகத்தில் பலருக்கு அறிமுகபடுத்தியது இசைஅமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவிற்கு  ரமணர்தான்  ஆன்மீக  குரு.ரமணருக்காக இளையராஜா இயற்றிய "ராஜாவின் ரமணமாலை",பக்தி பாடல்களில் மிகவும் ஹிட் அடித்த ஆல்பம். "பிட்சை பாத்திரம்  ஏந்தி வந்தேன்" பாடல்கூட ரமணமாலை ஆல்பத்தில்  இருந்து நான் கடவுள் படத்தில் பயன்படுத்தப்பட்டது என்று பலரும் அறிந்திருப்பீர்கள்.. 

ரமண மகரிஷி தனது பக்தர்களுக்கு "silent teacher" என்று உணரபடுகிறார் .எல்லோரும் இப்போது பயன்படுத்தும் "நான் யார்" என்ற தத்துவ விசாரணைக்கு சொந்தக்காரர்.ரமண மகரிஷிக்கு  இந்தியா  மட்டுமில்லாமல்  வெளிநாடுகளில் இருந்தும் பல பேர்  சீடர்களாக இருந்தனர்.அதில் குறிப்பிடும்படி சொல்லவேண்டும் என்றால் டேவிட் கோதமன்(David Godman), இவர்தான் ரமணரை வெளி உலகத்துக்கு தனது புத்தககங்கள்வலைத்தளம் மூலம் அறிமுகபடுத்தினார். அதேபோல இந்தியாவில் ரமணரின்  முக்கிய சீடர் என்று உத்தர் பிரதேசத்தை  சேர்ந்த பாப்பாஜியை சொல்லலாம்.
CONTINUE /

தமிழ் சினிமா 2012






போன வருடம் 2012   தமிழ் திரைப்பட துறைக்கு  நல்ல வருடம் என்றுதான் சொல்ல வேண்டும்...நிறைய தமிழ்படங்கள் வெளியாகி கணிசமான சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றி பெற்றது.அதே போல் பெரிய பட்ஜெட் படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அனைவராலும் பாராட்ட பெற்ற திரைபடங்கள் அதே போல் எனக்கும் பிடித்த படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.

 இந்த வருடத்தின் சிறந்த தமிழ் திரைப்படங்கள்...



ஸ்பெஷல் பிரிவு
வழக்கு எண் 18/9
பிட்சா 
தடையற தாக்க 
நான் 
நீர் பறவை 




கமர்ஷியல் பிரிவு 
நான் ஈ 
துப்பாக்கி 
நண்பன் 
சுந்தரபாண்டியன் 





இயக்குனர் 
கார்த்திக் சுப்பராஜ் 
ராஜமௌலி 
மகிழ் திருமேனி 





இசை ஆல்பம் 
இமான் (கும்கி)



தயாரிப்பு நிறுவனம் 
விஜய் அண்டனி பிலிம் கார்பரேஷன் (நான்)
பிதர் டச் என்டேர்டைன்மென்ட் (தடையற தாக்க )




நடிகர் 
விஜய் 
விஜய் சேதுபதி 
சந்தானம் 

நடிகை 
சமந்தா 
லக்ஷ்மி மேனன் 

ஒளிப்பதிவு 
சுகுமார் (கும்கி,தடையற தாக்க )

வில்லன் 
வித்யுத் ஜமால் 


டீம் 
கும்கி 
பிட்சா 
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

CONTINUE /

Happy Newyear 2013 !!!! - Kittipull.com




அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


மேலும், போன வருடம் பிற்பாதியில் நிறைய பதிவுகள் எழுத முடியாமல் போனது.இந்த வருடம் அது போல் இல்லாமல் நிறைய டெக்னாலஜி பதிவுகள் எழுத ஆசை இருக்கிறது.இதுவரை என் தளத்தை படித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்....


ஒரு வலைத்தளத்தில் படித்து ரசித்ததை உங்களுடன் இத்தருணத்தில் பகிர்த்து கொள்கிறேன்....


You are your own best friend and your own biggest critic. Regardless of the opinions of others, at the end of the day the only reflection staring back at you in the mirror is your own. Accept everything about yourself – EVERYTHING! You are you and that is the beginning and the end – no apologies, no regrets.

People who are proud of themselves tend to have passions in life, feel content and set good examples for others. It requires envisioning the person you would like to become and making your best efforts to grow.

Being proud isn’t bragging about how great you are; it’s more like quietly knowing that you’re worth a lot. It’s not about thinking you’re perfect – because nobody is – but knowing that you’re worthy of being loved and accepted. All you have to do is be yourself and live the story that no one else can live – the story of your own unique life. Be proud, be confident, you never know who has been looking at you wishing they were you.


Happy newyear 2013!!!!!


Marc and angel.




மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்.

CONTINUE /

AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி


இந்த பதிவு Airtel வாடிக்கையாளர்களுக்கு.,


அவசரமாக ஒருவருக்கு போன் செய்ய வேண்டும்,


ஆனால் உங்கள் மொபைல் கணக்கில் பணம் இல்லை.மெசேஜ் அனுப்பவும் முடியவில்லை.பக்கத்திலும் ரீ சார்ஜ் செய்யும் கடைகள் இல்லை..இதுமாதிரி ஒரு சூழ்நிலையை கையாள ஒரு புது வசதியை  Airtel தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுதிருகிறது.



இந்த வசதி மூலம் உங்களது கணக்கில் கால் செய்யும் அளவுக்கு பணம் இல்லாமல் இருந்தால்


                                                   CALL SPACE PHONE NUMBER  

டைப் செய்து 121 என்ற எண்ணுக்கு அனுப்பிவிடுங்கள்.இந்த 121 சேவை நீங்கள் பேச விரும்பும் நபருக்கு ஒரு SMS அலெர்ட் அனுப்பும்




EXAMPLE                                                    CALL 123456789




நீங்கள் குறிப்பிட்ட எண் கொண்ட நபருக்கு “Please Call me Back, Thank you”.என்று SMS போகும்.அவர் உங்களை அழைத்தால் அவருக்கு சாதாரண கட்டணம்தான்.



இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்.இந்த சேவையை ஒரு நாளைக்கு மூன்று தடவை பயன்படுத்தலாம்.PREPAID/POSTPAID கணக்குகளுக்கும் பொருந்தும்.





CONTINUE /

அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற - கடல்



இளையராஜாவை நிறைய பிடிக்கும் என்றாலும் இங்கொன்று அங்கொன்றாய் பல ரகுமான் பாடல்களுக்கும் நான் ரசிகன்.இதற்கு முன் விண்ணை தாண்டி வருவாயாவில் "அன்பில் அவன்" பாடல் எனக்கு பிடித்திருந்தது.அதேபோல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமிபத்தில் வெளியான கடல் படத்தின் பாடல்கள் ரகுமான் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இசை ரசிகர்களுக்கும் ஒரு பெரிய ட்ரீட் என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற பாடல்தான் என் பிக்.



என்பதுகளில்  புகழ்பெற்ற ரே சார்லஸ் வகை பாடல்களை நேர்த்தியாக தமிழ்படுத்தி, தமிழ் மக்களுக்கு "அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற" பாடல் மூலம் அறிமுகம் செய்திருக்கிறார் ரகுமான்.Blues, Rock, Soul, Gospel போன்ற பாடல் பாணிகளுக்கு தன குரல் மூலம் உயிர் தந்தவர் அமெரிக்காவை சேர்ந்த ரே சார்லஸ்.குரலுக்கு முக்கியவத்துவம் தந்து, இசையை தன் குரலுடன் மெல்லிய நீரோடை போல்  அழகாக தன் பாடல்களில்    பயணிக்க செய்வார்.இந்த பாணியை கோஸ்பல் வகை அல்லது ரே சார்லஸ் வகை என்று சொல்லுவார்கள்.ரகுமான் கையாண்ட இந்த மெட்டு தமிழுக்கு ரொம்ப புதுசு.சிட் ஸ்ரீராம்தான் பாடலை பாடியிருக்கிறார்.பாடல் கேட்பதற்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது.பாடலின் நடுவே நாலு அஞ்சு இடத்தில மட்டும் ட்ரம்ஸ் ஒலிப்பது கேட்கிறது மற்றபடி முழுதும் ஸ்ரீராமின் குரல் ஆதிக்கம்தான்.


நீங்கள் இந்த பாடலை கேட்க துவங்கியதும் பழைய ஆங்கில பாடல் எதோ ஒன்றை கேட்ட மாதிரி  இருக்கே என்று நினைக்கலாம்.நீங்கள் இந்த பாணி இசையை முன்பு கேட்டிருந்தாலும், இந்த மாதிரி இசையை  இவ்வளவு நேர்த்தியாக தமிழ்படுத்த ரகுமானுக்கு மட்டுமே சாத்தியம்.  ஸ்ரீராமின் அந்த ஏக்கம் கலந்த குரலில் நாம் கிறங்கிதான் போகிறோம்.



இதுபோல் நிறைய ரகுமான் மேஜிக் பாடல்களை, தமிழ் இசை ரசிகனாய் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.



பாடல் : அடியே அடியே

பாடகர் : சிட் ஸ்ரீராம்
கவிஞர் : கார்கி
ட்ரம்ஸ் : ரஞ்சித் பரோட்@நிர்வானா ஸ்டுடியோஸ்,மும்பை
ஜாஸ் வோகல் : மரியா ரோ வின்சென்ட்

பிடித்த வரிகள் :பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாறனே
இந்த காடு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்னே சுத்துரேனே....


CONTINUE /
 

கிட்டிபுள்ளு © |